குர்ஆனும் மருத்துவமும்
==========================



நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம். அநீதி இழைத்தோருக்கு நட்டத்தையே அதிகப்படுத்தும்.

திருக்குர்ஆன்  17:82

அல்குர்ஆனை தினமும் சத்தமாக ஓதுகின்றவரும் அதை கேட்பவரும் ஹாட் அட்டாக் மற்றும் கேன்சர் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்களாம்.
சுபஹானல்லாஹ்...!

Vender Hoven (நெதர்லாண்டு ஆராய்ச்சியாளர் )கூறுகிறார் குர்ஆனின் ஒலி அலைகள் (Sound Waves)மற்ற மொழிகளை விட மிகவும் மாறுபடுகிறது மற்றும் அதில் தனித்துவமாகவும் உள்ளது அதன் அதிர்வலைகளால் மனிதனின் உடலில் வியக்கதக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இது குறிப்பாக தினமும் குர்ஆனை மூன்று மணி நேரம் சத்தமாக ஓதுகின்றவருக்கும் அதை கேட்பவருக்கும் கேன்சர் மற்றும் ஹாட் அட்டாக் ஏற்படாமல் பெரிதும் பாதுகாக்கிறது மற்றும் மூளை திறனையும் அதிகப்படுத்துகிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.
(அல்குர்ஆன்: 7:204)

United Kingdom-ல் உள்ள University of Salford கல்லூரியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.ஆய்வு நடத்த முன் ஆய்வில் கலந்து கொள்ளவிருந்த மாணவர்களின் இதய ஓட்டம்,இரத்த அழுத்தம்,மன அழுத்தம்
(Heart Rate,blood pressure,perceived stress level) தனித்தனியாக அளவிடப்பட்டது.

அங்கு பயின்ற 30 மாணவர்களை 15 பேராக இரு குழுவாக பிரித்து முதல் 15 பேர் கொண்ட குழுவில் இருந்த மாணவர்களை குர்ஆனையும் அடுத்த 15 பேர் கொண்ட குழுக்களை மற்ற அரபிய புத்தங்களையும் படிக்க வைத்தனர்

ஆய்வு முடிவானது அவர்களுக்கு மிகவும் வியக்கதக்க வகையில் இருந்தது.

குர் ஆனை ஓதியவர்களின் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் மனிதனின் உடலுக்கு நன்மை தரும் வகையில் குறைந்துள்ளது.

மற்ற அரேபிய புத்தங்களை வாசித்தவர்களின் இரத்த அழுத்ததில் எந்த மாற்றமும் இல்லை மேலும் அவர்களின் மன அழுத்தம் அதிகரித்து காணப்பட்டது

ஆய்வு நடத்திய University of Salford கல்லூரி நிறுவாகம் குர்ஆனை வாசிப்பதால் மனிதனுக்கு தேவையான முக்கியமான இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை கன்ரோல் செய்கிறது மேலும் அந்த நிறுவாகம் தனது கல்லுரியில் பயிலும் மாணவர்களை தினமும் குர்ஆனை ஓதவும் அறிவுறுத்திவுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...!

முஹம்மது நபி (ஸல்) அவர்களும் தினமும் அதிகாலையில் குர்ஆனை ஓத அறிவுறுத்தினார்கள்

அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
(அல்குர்ஆன்: 13:28)

‏குர் ஆன் மனித குலத்துக்கு அல்லாஹ்வால் அருள் செய்யப்பட்டது,
ரமழான் மாதம் தான் குர்ஆன் ஓத வேண்டும் என்பது அல்ல, இறைவேதத்தை தினமும் ஓதுவோம்

யா அல்லாஹ்...! குர் ஆனை ஓத கூடிய பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள்வாயாக...